unfoldingWord 11 - பஸ்கா
![unfoldingWord 11 - பஸ்கா](https://static.globalrecordings.net/300x200/z02_Ex_12_02.jpg)
Преглед: Exodus 11:1-12:32
Број на скрипта: 1211
Јазик: Tamil
Публиката: General
Цел: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
Статус: Approved
Скриптите се основни упатства за превод и снимање на други јазици. Тие треба да се приспособат по потреба за да бидат разбирливи и релевантни за секоја различна култура и јазик. На некои употребени термини и концепти може да им треба повеќе објаснување или дури да бидат заменети или целосно испуштени.
Текст на скрипта
![](https://static.globalrecordings.net/300x200/z02_Ex_10_12.jpg)
மோசேயையும் ஆரோனையும் பார்வோனிடத்திற்கு தேவன் அனுப்பி, நீ இஸ்ரவேலரை போகவிடு, இல்லையெனில் எகிப்திலுள்ள முதலில் பிறந்த எல்லா ஆண்பிள்ளைகளையும், மிருகஜீவன்களையும் தேவன் அழிப்பார் என்று எச்சரித்தனர். இதைக் கேட்டும் பார்வோன் தேவனுக்குக் கீழ்படியவில்லை.
![](https://static.globalrecordings.net/300x200/z02_Ex_12_01.jpg)
தன்னை விசுவாசிக்கிறவர்களின் முதல் ஆண் பிள்ளைகளை காப்பாற்றும்படி, பழுதற்ற ஒரு ஆட்டுக் குட்டியை கொன்று தப்பித்துக்கொள்ள தேவன் ஒரு வழியைத் தந்தார்.
![](https://static.globalrecordings.net/300x200/z02_Ex_12_02.jpg)
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தங்கள் வீட்டு நிலைக்கால்களின்மேல் பூசும்படி தேவன் இஸ்ரவேலரிடம் சொன்னார். மேலும் அவர்கள் இறைச்சியை சுட்டு, புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்டு சீக்கிரமாய் சாப்பிட்டு எகிப்தைவிட்டுப் புறப்ப சொன்னார்.
![](https://static.globalrecordings.net/300x200/z02_Ex_12_03.jpg)
தேவன் தங்களுக்கு சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தனர். அன்று இராத்திரியில் தேவன் எகிப்து எங்கும் போய் முதல் ஆண்பிள்ளைகளை கொன்றுபோட்டார்.
![](https://static.globalrecordings.net/300x200/z02_Ex_12_04.jpg)
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தங்கள் கதவுகளில் பூசியிருந்த இஸ்ரவேலர்களுக்கு ஒன்று சம்பவிக்கவில்லை. தேவன் அவர்களைக் கடந்து போய்விட்டார். அவர்கள் வீட்டினுள் பாதுகாப்பாக இருந்தனர்.
![](https://static.globalrecordings.net/300x200/z02_Ex_12_05.jpg)
ஆனால் எகிப்தியர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலும் போனதினால், அவர்களைக் கடந்து போகாமல், அவர்களுடைய முதற்பிறப்புகளை எல்லாம் தேவன் கொன்றுபோட்டார்.
![](https://static.globalrecordings.net/300x200/z02_Ex_12_06.jpg)
எகிப்தியரின் காவலில் இருக்கிறவர்களிலிருந்து, பார்வோனின் முதல் ஆண் பிள்ளைகள் வரை எல்லோரும் மரித்துப்போயினர். அவர்களுடைய துக்கம் மிகவும் கொடிதாய் இருந்ததினால் அழுகவும், புலம்பவும் செய்தனர்.
![](https://static.globalrecordings.net/300x200/z02_Ex_12_07.jpg)
அன்று இரவில், பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைத்து, சீக்கிரமாய் இஸ்ரவேலரைக் கூட்டிக்கொண்டு எகிப்தை விட்டு போங்கள் என்றான். எகிப்தியர்கள் சீக்கிரமாய் போகும்படி இஸ்ரவேலர்களை துரிதப்படுத்தினர்.